சீரற்ற காலநிலையால் 14 மாவட்டங்களில், 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
சீரற்ற காலநிலை காரணாக 14 மாவட்டங்களை சேர்ந்த 34 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட நான்காயிரத்து 153 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
14 ஆயிரத்;து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 946 குடும்பங்களை சேர்ந்த மூவாயிரத்து 149 பேர் 29 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் ஐந்து பேர் பலியானதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இதுவரை ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.