இலங்கையில் உயிரிழந்த கொரோனா தொற்றாளரின் இறுதிக் கிரியைகள் சர்வதேச விதிமுறைகளின் படி, இடம்பெறவுள்ளன
கொவிட்-19 நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் இறுதி கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமையவே நடைபெறும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் ‘கொரோனா வைரஸ்’ தொற்றுக் காரணமாக முதலாவது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்திய நிபுணருமான டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார்.
மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஒருவர் நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.