மியன்மாருக்கு, ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
மியன்மாருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மியன்மாருக்கு விரைவில் அதன் இராணுவம் மேற்கொண்ட செயற்பாடுகளின் விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று சபை சுட்டிக்காட்டியுள்ளது. அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு மியன்மார் மதிப்பளிக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியிருக்கிறது. மியன்மார் இராணுவம் தொடர்ந்தும் உள்நாட்டு இணைய சேவைகளை முடக்கி வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.