பாகிஸ்தான் பிரதமர் இரண்டு நாள் உததியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெறுகின்றது. விஜயத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டிலும் அவர் கலந்துகொள்வார்.